Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தமிழர் கால்வாய்: எல்லை கடந்து மீன் பிடிக்கலாம்

Saturday, June 30, 2007

எல்லை கடந்து மீன் பிடிக்கலாம்

பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் எல்லை கடந்து மீன் பிடிக்கலாம்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
ஐ. நா. முன்னாள் ஆலோசகர், கடலியலாளர்
்இந்திய மீனவர், எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் எல்லைகளுள் மீன்பிடிப்பது முறையற்றதுதான். ஆனாலும் கடலுக்குப் புறப்படும் எந்த மீனவரும், மீன்வளம் எங்கிருக்கிறதோ அங்கேதானே போவார்! எனவே, இந்திய இலங்கை எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவரைத் தடுக்க முடியுமா? ப்படி அவர்கள் சென்றால் அவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுடலாமா? துப்பாக்கியால் சுடாதீர்கள், இந்திய மீனவர்களைக் கொல்லாதீர்கள் என இலங்கை அரசிடம் கூறியுள்ளோம். ஒத்துழைப்பதாக இலங்கை அரசும் உறுதி அளித்துள்ளது.’
இந்தக் கருத்துகளமைந்த செய்தியை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் 31.5.2007 அன்று சென்னையில் கூறியுள்ளார்.ந்திய மீனவருக்கு இந்தக் கருத்துரை மகிழ்ச்சியைத் தரும். கரையை விட்டுக் கடலுக்குள் புறப்படும் மீனவர், எல்லைக் கோடுகளை அறிவாரா? கடலுக்குள் கற்பனையாக உள்ள எல்லைக் கோட்டினைத் துல்லியமாகத் தெரிந்து கொண்டா கடலில் தொழில் செய்கின்றனர் மீனவர்? ம். கே. நாராயணனின் கருத்துகள், மீனவரின் மெய்நிலையைத் தெளிவாக, உள்ளோட்டமாக எடுத்துக் கூறின.
பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் மீன் பிடிப்பவர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் வாழ்கின்ற தமிழ் மீனவர்களே. மன்னார் வளை குடாவின் தென் பகுதிக்கு இலங்கையின் நீர்கொழும்பில் வாழும் பரதவரான தமிழ்பேசும் சிங்கள மீனவரும் வருவதுண்டு.
பாக்கு நீரிணையில் 10,000 சதுர கிமீ. பரப்பளவும் மன்னார் வளைகுடாவில் 20,000 சதுர கிமீ. பரப்பளவும் ஆக, மொத்தம் தோராயமாக 30,000 சதுர கிமீ. பரப்பளவுக் கடலின் உயிரின வளத்தை இந்த இரு கரைகளிலும் வாழும் மீனவர் தேடுகின்றனர்.லங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அனைத்துலக எல்லைக்கோடு உண்டு. இந்தக் கோட்டினை 1974ஆம் ஆண்டு இந்திரா காந்தியும் சிறீமாவும் ஒப்பமிட்ட உடன்பாட்டில் வரையறுத்தனர்.ந்த எல்லைக் கோடு, வங்காள விரிகுடாவும் பாக்கு நீரிணையும் சந்திக்கும் கடலில் (110 26’ வடக்கு 830 22’ கிழக்கு) தொடங்கி, தென்மேற்காக வளைவுகளுடன் 275 கிமீ. வரை நீண்டு, மன்னார் வளை குடாவும் அரபிக் கடலும் சந்திக்கும் கடலில் (050 00’ வடக்கு 770 10.6’ கிழக்கு) முடிவடைகிறது.ந்தக் கோட்டுக்கு வெளியே அனைத்துலக உடன்பாடுகளுக்கு அமைய இந்தியப் பொருளாதார வலயமும் இலங்கைப் பொருளாதார வலயமும் அவ்வவ் நாட்டு எல்லைகளாக விரிகின்றன.மிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து கன்னியாகுமரி வரை நீள்கின்ற கடற்கரை தோராயமாக 750 கீமீ. ஆகும். இலங்கையின் பருத்தித்துறையிலிருந்து சிலாபம் வரை நீள்கின்ற கடற்கரையும் தோராயமாக 700 கிமீ. ஆகும்.ந்த இரு கடல்களை ஒட்டிய தமிழகக் கடலோரத்தில் தோராயமாக 450,000 மீனவரும், இலங்கையை ஒட்டிய கடலோரத்தில் தோராயமாக 200,000 மீனவரும் வாழ்கின்றனர்.ந்த இரு கடல்களின் தமிழகக் கரையோர மீனவர் ஆண்டுக்கு தோராயமாக 300,000 மெட்றிக் தொன் கடல் உயிரினங்களையும், இலங்கை மீனவர் ஆண்டுக்குகுத் தோராயமாக 200,000 மெட்றிக் தொன் கடல் உயிரினங்களைக் கரை சேர்க்கின்றனர்.
,000 சதுர கிமீ. பரப்பளவுக் கடலில் 650,000 மீனவர் 500,000 மெட்றிக் தொன் கடல் உயிரின வளங்களைக் கரை சேர்க்கின்றனர். ஆண்டு ஒன்றுக்கு 1 சதுர கிமீ. பரப்பளவுக் கடலில் தோராயமாக 18 - 20 மெட்றிக் தொன் மீன் பிடிபடுகிறது. ஆண்டொன்றுக்கு ஒரு மீனவர் 0.75 - 1 மெட்றிக் தொன் கடல் உயிரினத்தைப் பிடித்து வருகிறார்.
மேற்கூறிய தோராயப் புள்ளி விவரங்கள் சமகால நிகழ்வுகளின் பிரதிபலிப்பு ஆகும். மீன் வளம் எங்கிருக்கிறதோ, மீனவர் நாட்டு எல்லையைத் தாண்டித் தேடலாம், பிடித்து வரலாம் என்ற எம். கே. நாராயணனின் கருத்து, இந்திய அரசின் கருத்தாகும். இந்த இருகடல்களின் இரு கரைகளிலும் வாழும் தமிழ் மீனவர் பெரிதும் வரவேற்பர். காலாதி காலமாக இந்த இரு கடல்களின் இரு கரைகளிலும் வாழும் தமிழ் மீனவர் கடலுக்குத் தொழிலுக்கு வந்தால், தமக்குள்ளே ஆகக் குறைந்த சச்சரவுகளையும் ஆகக் கூடிய ஒத்துழைப்பைகளையும் வழங்கிக் கடலில் மீன் பிடித்தனர். எம். கே. நாராயணனின் இந்தக் கருத்து, காலாதி கால உறவையும் தொடர்பையும் வலியுறுத்தும் கருத்து. ந்த சில ஆண்டுகளாகப் பறவைகளைச் சுடுவதுபோல் அக்கடல்களில் தமிழரைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு எச்சரிக்கையாகவும் இக்கருத்து அமையும். கச்ச தீவு யாருக்குச் சொந்தம் என்ற வினாவையும் பொருளற்றதாக்கிவிடும். இந்தக் கருத்து 1974இன் இந்திய இலங்கை உடன்பாட்டின் மீன்பிடி தொடர்பான விதிகளையும் பொருளற்றதாக்கிவிடும்.ந்திய மீனவர் இலங்கைக் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பர், பாதுகாப்பாகத் தமிழகம் திரும்புவர். இலங்கை மீனவரும் இந்தியக் கடல் எல்லைக்குள் செல்வர், மீன் பிடிப்பர் பாதுகாப்பாகத் திரும்புவர். இந்தியா அரசின் கருத்துக்கமைய இனிமேல் அவை பாரிய சட்ட மீறல்கள் ஆகா.லின் பரப்பளவு மாறாமல் இருக்கிறது. கடலின் உயிரின மொத்த உற்பத்தி மாறாமல் இருக்கிறது. இருகரைகளிலும் வாழ்கின்ற மீனவர் தொகை கடந்த 50 ஆண்டுகளில் மும்மடங்காகப் பெருகி உள்ளது. கட்டுமரங்கள் பல விசைப் படகுகளாயின. இழுவைப் படகுகள் புகுந்தன. நைலோன் வலைகளும் இழுவை வலைகளும் பெருகின. இதனால் மீன்பிடி அளவு வேகமாக உயர்ந்தது.
முதனிலை உற்பத்தியும் அதைத் தொடரும் விலங்கின உயிர்ப் பெருக்கமும் மொத்தக் கடல் உயிரின உற்பத்திக்குள் உள்வரவுகள். மீன் பிடித்தல் மொத்த உற்பத்தியின் வெளியேற்றம். உள்வரவும் வெளியேற்றமும் சம அளவாக இருந்தால் உற்பத்திச் சமன்பாடு இருக்கும். வெளியேற்றம் கூடுதாக இருந்தால், அதுவும் ஆண்டு தோறும் இந்த வெளியேற்றம் கூடுதலாகித் தொடருமானால் இந்த இரு கடல்களின் வளம் குன்றும். ஈற்றில் உயிரின வளமற்ற பாலையாகக் கடல் மாறும்.ல் வளத்தைப் பேணவும் நாடுகடந்த மீனவரின் உரிமையைக் காக்கவும், எல்லைகளைத் தாண்டி மீன்பிடிக்கலாம் என்ற முறைமை உலகெங்கும் வழக்கிலுள்ள ஒன்றாகும். யப்பானும் கொரியாவும் தமக்கு இடையிலுள்ள கடலில் இருநாட்டு மீனவரும் மீன்பிடிக்க ஏற்பாடு செய்துள்ளன. நோர்வே, சுவீடன், பின்லாந்து, ருசியா ஆகிய நாடுகள் தமக்குப் பொதுவான கடலில் தத்தம் நாட்டு மீனவர் அனைவரும் கடல் எல்லைகளைத் தாண்டி மீன் பிடிக்கும் உரிமங்களை வழங்கியுள்ளன. இத்தகைய உடன்பாடுகள் கூட்டு ஆணையங்களாகி உலகெங்கும் மீனவருக்கும் கடல் வளப் பாதுகாப்புக்கும் பயன்படுகின்றன.
,000 சதுர கிமீ. பரப்பளவு கொண்ட இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிட்ட கடலில், இருநாட்டு மீனவரும் கடலின் எப்பகுதியிலும் மீன்பிடிக்க எம். கே. நாராயணின் கருத்துரை தொடக்கமாக அமைந்துள்ளது.ல்லைக் கோட்டில் ஓளிரும் மிதவைகள் அமைத்து அவரவர் கடலுக்குள் அவ்வவ் நாட்டு மீனவரை முடக்குவதை ஒரு வழியாகக் கொள்ளலாம்.
வரையறை செய்த கடல் எல்லை ஒருபுறமிருக்க, மீன்பிடி உரிமத்தை இரு நாட்டவருக்கும் கடல் முழுவதும் பொதுவானதாக்கும் முறையை மற்றொரு வழியாக்கலாம். இதற்கான படிமுறை நிலைகள் பின்வருமாறு அமையும்.
\மன்பாட்டு மீன்பிடி அளவை முதலில் தீர்மானிக்க வேண்டும்.
மீனவர் தொகைக்கேற்ப, இருநாட்டவருக்கும் அந்தச் சமன்பாட்டு மீன்பிடி அளவில் எந்தெந்த மீன் வகைகளில் எவ்வெவ்வளவு பங்கு என்பதைத் தீர்மானிக்க வேண்டும். யிரின இனப்பெருக்கக் காலத்தில் மீன்பிடித் தடை இரு நாடுகளுக்கும் பொதுவாகவேண்டும்.றிப்பிட்ட இறங்கு துறைகளில் மட்டுமே மீன்பிடியைக் கரை சேர்க்க வேண்டும்.ந்த இறங்கு துறைகளில் கரைசேரும் மீன்பிடி அளவுகளை நாள்தொறும் குறிக்க வேண்டும்.ரு கரைகளிலுமுள்ள இறங்கு துறைகளில் கரை சேரும் மீன்களின் மொத்த அளவு எந்தெந்த மாதத்துக்கு எந்தெந்த வகைக்கு எதுவாக இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அந்த அளவை எட்டியதும் மீனவருக்கு அறிவித்து மீன்பிடியை நிறுத்த வேண்டும்.றங்கு துறைகளில் கண்காணிப்புக் கூட்டாக நடைமுறையில் இருக்கும்.ந்த நடைமுறைகளுக்காக இரு கரைகளில் உள்ள மீனவர்களின் அரசுகள் கூடி, ஓர் ஆணையத்தை நிறுவி, இந்த 30,000 சதுரப் பரப்பளவுக் கடலின் மீன்பிடியைக் கண்காணிக்க வேண்டும். மீனவரின் தொழிற் பரப்பெல்லை கட்டுப்பாடின்றி இருக்க அனைத்துலக வழிகாட்டல்களும் எடுத்துக்காட்டுகளும் இந்தப் படிமுறை நிலைகளைச் சார்ந்தன.
மீனவர்களின் உணர்வைப் பிரதிபலிக்கின்ற, இரு நாட்டு மீனவரும் அன்னியோன்னியமாக ஒருவருக்கு ஒருவர் ஆதரவுடன் மீன்பிடிப்பதற்கான அடித்தளமாக அமையும் ஓர் ஆணையத் தொடக்கத்துக்கான அடிக்கல்லை எம். கே. நாராயணன் இந்திய அரசின் சார்பில் 31.5.2007அன்று சென்னையில் நாட்டியுள்ளார். ரு நாட்டுச் சட்டங்களையும் மீறும் செயல்களுக்காக அவ்வவ் நாட்டுக் கடற்படைகள் தேவைப்படுமேயன்றி மீனவரைப் பாதுகாக்கவோ அவர்களின் பயணங்களைக் கண்காணிக்கவோ கடற்டைகள் தேவைப் படா. இத்தகைய கூட்டு ஆணையத்தின் முகாமையில் இக்கடற்பரப்பு வருமாயின் கடற்படைகளுக்கு அங்கு பணியே இருக்காது. தமிழர் எவரும் அக்கடலில் கொலைசெய்யப்படார். இந்திய இலங்கைத் தமிழ் மீனவரின் வளமான எதிர்காலம் இத்தகைய கூட்டு ஆணையக் கட்டமைப்பில் அமைதலே பொருந்தும்.

0 Comments:

Post a Comment

<< Home